டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ரத்து செய்யகோரிய மனுக்கள் மீது பதில் அளிக்க யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 29-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.